Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன்னார் அருகே குழியில் மேலும் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு!

மன்னார் அருகே குழியில் மேலும் மண்டை ஓடுகள் கண்டெடுப்பு!
, செவ்வாய், 24 டிசம்பர் 2013 (15:52 IST)
இலங்கையில் உள்ள மன்னார், திருக்கேதீஸ்வரம் கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட குழியில் மண்டை ஓடுகள் பல சிக்கியது. இதனையடுத்து தோண்டுதல் தொடரப்பட்ட நிலையில் மேலும் பல மண்டை ஓடுகள் மனித உடல் எச்சங்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
FILE

இந்தப் புதைகுழியிலிருந்து இதுவரை 10 மண்டை ஓடுகளும், மனித உடல் எச்ச சொச்சங்களும் எடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்திற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

வரும் சனிக்கிழமை மேலும் மண்டை ஓடுகள் அதில் இருக்கிறதா என்பதைப்பார்த்து அவற்றையும் எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வரும் சனியன்று காலை 7 மணிக்கு புதைகுழி தோண்டப்படுகிறது.

இதற்கிடையே இதுவரை கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை பரிசோதனை சாலைக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு அருகில் நீர்க்குழாய் பொருத்தும் பணிக்காக தோண்டப்பட்டபோது 6 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது.

இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil