Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் செல்வாக்கு சரிவு: ஜப்பான் பிரதமர் பதவி விலகுகிறார்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2011 (19:34 IST)
மக்கள் செல்வாக்கை முற்றிலும் இழந்தவிட்டதைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் நயோடோ கன் இன்னும் ஒரு வாரத்திற்குள் பதவி விலகுகிறார் என்று அந்நாட்டின் முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் செய்ஜி மயேஹ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் கடும் பூகம்பமும்,சுனாமித்தாக்குதலும் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட அணு உலை விபத்துகளும் ஏற்பட்டு, பல்லாயிரக்கானோர் மாண்டனர்.

இதன் பின்னர், மீட்பு பணிகளில் ஏற்பட்ட பல்வேறு பின்னடைவுகளுக்கும், மக்களின் கடும் அதிருப்திக்கும், துரித நடவடிக்கைகள் எடுக்காததற்கும்,மக்களின் புகாரை தீர்த்து வைப்பதற்கான முயற்சிகள் சரிவர எடுக்காமல், மக்களின் கோபத்திற்கு ஆளானார் தற்போதைய பிரதமர் கன்.

இது சம்பந்தமாக நடந்த வோட்டெடுப்பில் பிரதமர் கன் சுமார் 20 விழுக்காடுகளுக்கும் குறைவான ஆதரவு காணப்பட்டது.இதன் காரணமாக மக்களிடையே அவர் செல்வாக்கு சரிந்துவிட்டதால், தனது பிரதமர் பதவியிலிருந்து கன் விலகுகிறார் என்று மயேஹ்ரா மேலும் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments