Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் தேசமாக உள்ளது அமெரிக்கா : சிஐஏ

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2009 (16:04 IST)
பல்வேறு நாடுகளில் போரிட்டு வரும் அமெரிக்கா, போர் தேசமாக உள்ளது என்று அந்நாட்டுன் உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் லியோன் பனட்டா கூறியுள்ளார்.

போரில் ஈடுபட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நாங்கள் போரிட்டு வருகிறோம்.மேலும் பாகிஸ்தானிலுள்ள அல் - காய்தா மற்றும் இதர தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவும் நாங்கள் போரிட்டு வருகிறோம்.

அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் சிஐஏ - வின் முதல் கடமையாகும்.

மேலும் வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் அணு ஆயுத பரவல் சவாலையும் நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அத்துடன் அமெரிக்க பங்குச் சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விதமாகவும், தண்ணீர் மற்றும் மின் அமைப்புகளை சீர்குலைக்கும் விதமாகவும் சைஃபர் பாதுகாப்பிலும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என லியான் மேலும் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments