Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் தேசமாக உள்ளது அமெரிக்கா : சிஐஏ

போர் தேசமாக உள்ளது அமெரிக்கா : சிஐஏ
வாஷிங்டன் , வியாழன், 3 செப்டம்பர் 2009 (16:04 IST)
பல்வேறு நாடுகளில் போரிட்டு வரும் அமெரிக்கா, போர் தேசமாக உள்ளது என்று அந்நாட்டுன் உளவு அமைப்பான சிஐஏ இயக்குனர் லியோன் பனட்டா கூறியுள்ளார்.

போரில் ஈடுபட்டுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது.ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நாங்கள் போரிட்டு வருகிறோம்.மேலும் பாகிஸ்தானிலுள்ள அல் - காய்தா மற்றும் இதர தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவும் நாங்கள் போரிட்டு வருகிறோம்.

அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் சிஐஏ - வின் முதல் கடமையாகும்.

மேலும் வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் அணு ஆயுத பரவல் சவாலையும் நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அத்துடன் அமெரிக்க பங்குச் சந்தையில் வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விதமாகவும், தண்ணீர் மற்றும் மின் அமைப்புகளை சீர்குலைக்கும் விதமாகவும் சைஃபர் பாதுகாப்பிலும் பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என லியான் மேலும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil