Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரின் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட ஐ.நா. பட்டியலில் இலங்கை!

Webdunia
வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:05 IST)
ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு போர்களின் போது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது.
 
ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆகிய நாடுகளில் நடந்த  மோதல்களில் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன இது தொடர்பான ஐ.நா பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா தெரிவித்துள்ளார். 
 
போராட்ட குழுவினர், ஆயுதக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் என, 34 ஆயுதக் குழுக்கள், மோதல் சூழலில் பாலியல் பலாத்காரம்  மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டு உள்ளன.
 
இந்த பட்டியலில் ஸ்ரீலங்கா, அங்கோலா,போஸ்னியா ஹெர்சகோவினா, கம்போடியா, கினியா, லைபீரியா, லிபியா, நேபாளம், சியராலியோன், சோமாலியா, சூடான், யேமன், மத்திய ஆப்ரிக்க குடியரசு, ஐவரி கோஸ்ட், காங்கோ, மாலி, தென்சூடான், சிரியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் இடம்பெற்றுள்ளன

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!