பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் காராஷான் அக்குய்னோ இன்று மரணமடைந்தார்.
கடந்த 16 மாத காலமாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த அக்குய்னோ, இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
76 வயதாகும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும், இன்று அதிகாலை 3.18 மணியளவில் திடீர் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக அக்குய்னோவின் மகன் பெனிகோ தெரிவித்தார்.