Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக். : மும்பை தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை ஒத்திவைப்பு

Webdunia
சனி, 4 ஜூலை 2009 (17:38 IST)
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாற்றப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகளுக்கு எதிரான வழக்கை பாகிஸ்தான் நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நிகழந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் செயல் பிரிவு தலைவர் ஷாகீர் ரெஹ்மான் லக்வி உள்ளிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது ராவல்பிண்டியில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு இரண்டாவது நீதிமன்ற நீதிபதி ஷாகி முகமத் கவுத் விசாரித்து வந்த நிலையில், அவர் அந்த நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டார்.

இதனால் இந்த வழக்கு கடந்த கடந்த மே மாதம் 23 ஆம் தேதிக்குப் பின்னர் விசாரிக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் புலனாய்வு முகமை கூட்டமைப்பு,கடந்த ஜூன் 6 ஆம் தேதியன்று பயங்கரவாத தடுப்பு முதலாவது நீதிமன்ற நீதிபதி அக்ரம் அவானை அணுகி, இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து அவர் இந்த வழக்கை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி அந்த வழக்கு அன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது, மீண்டும் வருகிற ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்னும் இவ்வழக்கை விசாரிப்பதற்கான நீதிபதி நியமிக்கப்படாததால், இவ்வழக்கு வருகிற ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments