Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்.: தாலிபான்கள் பிடியிலிருந்து 2 சீக்கியர்கள் மீட்பு

Webdunia
திங்கள், 1 மார்ச் 2010 (16:23 IST)
தாலிபான்களால் கடத்திச் செல்லப்பட்ட சீக்கியர்கள் இரண்டு பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பகுதியிலிருந்து, சுர்ஜித் சிங ், குர்விந்தர் சிங், ஜஸ்பால் சிங் மற்றும் மஹால் சிங் ஆகிய நான்கு பேர் தாலிபான்களால் கடத்தி செல்லப்பட்டனர்.

பின்னர் அவர்களை விடுவிக்க வேண்டுமானால் பிணைத் தொகை தரப்பட வேண்டும் என தாலிபான்கள் அறிவித்திருந்தனர்.

ஆனால் தாலிபான்கள் விதித்த 'கெடு' முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜஸ்பால் சிங் மற்றும் மஹால்சிங் ஆகிய இரண்டு பேரும் கடந்த வாரம் தாலிபான்களால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தாலிபான்களின் பிடியில் மீதமுள்ள சுர்ஜித் சிங் மற்றும் குர்விந்தர் சிங் ஆகிய இரண்டு பேரையும் மீட்க பாகிஸ்தான் இராணுவம் களத்தில் குதித்தது.

கைபர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையின் பலனாக அவர்கள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments