Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான்: பனிச்சரிவில் சிக்கி 20 பேர் பலி?

பாகிஸ்தான்: பனிச்சரிவில் சிக்கி 20 பேர் பலி?
, ஞாயிறு, 2 டிசம்பர் 2012 (13:13 IST)
பாகிஸ்தான் எல்லைப் பகுதியாக சார்தாவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 5 இராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான் - இந்தியா எல்லைப்பகுதியான சார்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் 3 பேர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இவர்களை மீட்க 8 இராணுவ வீரர்கள் அடங்கிய 18 பேர் குழு சென்றுள்ளது. ஆனால், இவர்களின் நிலைமையும் இதுவரை என்னவென்று தெரியவில்லை.

இதுவரை 5 இராணுவத்தினரின் சடலம் உட்பட 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களைப் பற்றிய விவரம் தெரியாததால் அவர்களும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழிந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil