பாகிஸ்தானில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 25 வீரர்கள் பலியாகினர்.
பாகிஸ்தானுக்குள் ஊடுருவ முயன்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்த தாலிபான் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் முயன்றனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 25 வீரர்கள் பலியானதாகவும், தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.