Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 14 பேர் காயம்

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (16:52 IST)
பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் காயமடைந்தனர்.

பெஷாவர் அருகே சத்தர் பகுதியில் உள்ள சந்தையில் ரிமோட் கருவி மூலம் அந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பெஷாவர் நகர போலீஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் உள்ள ஒரு கடையின் முன்பாக இருந்த இருக்கைக்கு கீழே அந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக போலீஸார் கூறினர்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments