கராச்சியில் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான், கராச்சியில் உள்ள சோல்ஜர் பஜார் என்ற இடத்தில் 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீராம் மந்தீர் என்ற இந்து கோயில் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும் அதனை சுற்றிய வசிக்கும் வீடுகளும் இடிக்கப்பட்டதால் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துவிட்டதாகவும் இந்துக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
இதனால் வீடுகளை இழந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகுந்த நடவடிக்கை ஏதும் இதுவரை பாகிஸ்தான் எடுக்காததால், தங்களை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளிலிருந்து வீடுகளையே இடித்ததாக கூறிய போலீசார் வீடுகளில் சிலர் சாமி சிலை வைத்து வழிபட்டு வந்ததாக கூறினார்.
இடிக்கப்பட்ட இந்த கோவில் ஸ்ரீ ராம் பீர் மன்டீர் என்பதாகும், இந்த கோவில் பாகிஸ்தான் இந்து மத கவுன்சிலால் கட்டப்பட்டதாகும்.