வடமேற்கு பாகிஸ்தானின் பழங்குடியினர் இருக்கும் பகுதியில் உள்ள நெரிசலான சந்தையில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலியாகினர், மேலும் 15 க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.
இன்று காலை பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியினர் பகுதியான ஒரக்ஸாயில் உள்ள ஹசன்ஸாய் காய்கறி சந்தையில் ஏற்ப்ட்ட சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், மேலும் அங்கிருந்த 15 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பழங்குடியின வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.
கழுதை வண்டியில் மூட்டைகளின் நடுவே வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க்க வில்லை.