Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்காளதேஷ்: முஜிப்பூர் கொலையாளிகளுக்கு தூக்கு உறுதி

Webdunia
புதன், 27 ஜனவரி 2010 (18:32 IST)
பங்காளதேஷின் தந்தை என அழைக்கப்பட்ட ஷேக் முஜிப்பூர் ரஹ்மான் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.

முஜிப்பூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கீழ் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகமத் இஸ்லாம் தலைமையிலான நான்கு பேரடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த மரணதண்டனையை உறுதிபடுத்தி இன்று தீர்ப்பளித்தது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments