Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள விமான விபத்தில் 10 இந்திய சுற்றுலா பயணிகள் பலி

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2011 (14:08 IST)
நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 10 இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 19 பேர் பலியாகினர்.

நேபாளத்தின் புத்தா விமான போக்குவரத்து விமானம் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.சுற்றுலாவை முடித்துவிட்டு காத்மாண்டு நோக்கி அந்த் விமானம் திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது லலித்பூர் மாவட்டம் கோட்டந்தா மலைப் பகுதியில் எதிர்பாராவிதமாக மோதி விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரும் பலியாகினர்.இதில் 10 பேர் இந்திய சுற்றுலா பயணிகள் ஆவர்.மேலும் இந்த 10 பேரில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில் அவர்களது உடல்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரியவருகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments