Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபேசி ஒட்டுக்கேட்புக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஒபாமா திட்டம்

Webdunia
வெள்ளி, 28 மார்ச் 2014 (13:34 IST)
அமெரிக்க அரசின் ரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளால் எழுந்துள்ள சிக்கலைத் தணிக்கும் விதமாக, தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தை அதிபர் ஒபாமா வெளியிட்டார்.
 
அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ) லட்சக்கணக்கானவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதாக வெளியான தகவல்களால் உலகம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. 
 
இந்நிலையில் பொதுமக்களின் உரையாடல் பதிவுகளை அரசு மொத்தமாகப் பெறுவதையும், வைத்திருப்பதையும் தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார். அதன்படி, எந்தவொரு உளவு அமைப்பும், தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து அவர்களது வாடிக்கையாளர்களின் உரையாடல் பதிவுகளைப் பெற நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
 
அமெரிக்க அரசு பல்வேறு உலக நாடுகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து வருகிறது. இதனால் உலகம் முழுவதிலுமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததுள்ள நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்குத் தேவையான தகவல்களை உளவு அமைப்புகள் திரட்டுவதற்கும் பாதிப்பு ஏற்படாமல், பொதுமக்களின் தனியுரிமையையும் பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments