சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா-வின் நேரடி தலையீடு இன்றி ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இயலாது என அவர் கூறினார். போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய 5 ஆண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசு தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருவதாக குற்றம்சாற்றினார்.
இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் தமிழ் சமூகம் ஐ.நா.வின் உதவியை பெரிதும் நம்பி இருப்பதாகவும் அவர் கூறினார். நில அபகரிப்பு, சிங்களவர் குடியேற்றம், ராணுவ அத்துமீறல், மனித உரிமை மீறல் உள்ளிட்ட செயல்களில் ராஜபக்சே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாற்றினார்.