தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
செப்டம்பரில் நடைபெற உள்ள மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சரத் பொன்சேகாவை இணைத்துக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்களில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள், பொன்சேகாவை பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து சரத் பொன்சேகா இதுவரையில் தீர்மானிக்கவில்லை தெரிகிறது.