இலங்கை அதிபர் தேர்தல் முடிவினை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, தேர்தல் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமென் லேக் ஹோட்டலில் இராணுவத்தினரின் முற்றுகைக்குள் சிக்குண்டுள்ள பொன்சேகா, அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சார காலத்தில் மக்கள் காட்டிய உற்சாகம், தேர்தல் முடிவில் தென்படவில்லை எ னக ் கூறிய அவர், "இந்த முடிவை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப் போகிறோம் என்றும் தெரிவித்தார்.