Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிறுவன்

Webdunia
சனி, 3 ஆகஸ்ட் 2013 (10:08 IST)
FILE
அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் ஒரு சிறுவனிடம் மற்றொரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்ஸில்லேனியாவில் உள்ள ஜர்னஸ்டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் எலுமிச்சை சாறு விற்கும் கடையை நடத்திவந்தான். அந்த கடைக்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் கைத்துப்பாக்கியை காண்பித்து 10 வயது சிறுவனிடம் பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளான்.

துப்பாக்கியை பார்த்தவுடன் பயந்துப்போன சிறுவன் அவனிடம் இருந்த 30 டாலர் பணத்தை கொடுத்தான்.

ரூபாய் மதிப்பில் சுமார் 1800 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சிறுவன் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவிக்க, இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

12 வயது சிறுவனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு சிறுவர் சீர்திருத்த சட்டத்தின்கீழ் தண்டனை அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments