Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிறுவன்

துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சிறுவன்
, சனி, 3 ஆகஸ்ட் 2013 (10:08 IST)
FILE
அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் ஒரு சிறுவனிடம் மற்றொரு சிறுவன் பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்ஸில்லேனியாவில் உள்ள ஜர்னஸ்டவுன் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் எலுமிச்சை சாறு விற்கும் கடையை நடத்திவந்தான். அந்த கடைக்கு வந்த 12 வயது சிறுவன் ஒருவன் கைத்துப்பாக்கியை காண்பித்து 10 வயது சிறுவனிடம் பணத்தை கொடுக்கும்படி மிரட்டியுள்ளான்.

துப்பாக்கியை பார்த்தவுடன் பயந்துப்போன சிறுவன் அவனிடம் இருந்த 30 டாலர் பணத்தை கொடுத்தான்.

ரூபாய் மதிப்பில் சுமார் 1800 ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சிறுவன் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினான். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவிக்க, இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

12 வயது சிறுவனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு சிறுவர் சீர்திருத்த சட்டத்தின்கீழ் தண்டனை அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil