Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துனிசியா: படகு விபத்தில் 150 பேர் பலி

துனிசியா: படகு விபத்தில் 150 பேர் பலி
துனிசியா , சனி, 4 ஜூன் 2011 (12:52 IST)
துனிசியா அருகே படகு கவிழ்ந்ததில்,அதில் பயணித்த 150 பேர் பலியானார்கள்.

லிபியா தலைநகரில் இருந்து இத்தாலி நாட்டின் லம்பேடுஸா தீவுக்கு, ஒரு பெரிய படகில் வடக்கு ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 850 பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த படகு துனிசியா நாட்டின் கடற்பகுதியில் சென்ற போது,அந்த படகு திடீரென கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த படகில் பயணித்த 150 க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள்.மேலும் பலரை காணவில்லை.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil