Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருடர்களுக்கு எறும்புகளின் விசக்கடி தண்டனை

திருடர்களுக்கு எறும்புகளின் விசக்கடி தண்டனை

Suresh

, வியாழன், 17 ஏப்ரல் 2014 (20:07 IST)
பொலிவியாவில் இருசக்கர வாகனங்களை திருடிய நபர்களை மக்கள், மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை கடிக்க விட்டுள்ளனர்.
மேற்கு பொலிவியாவின் அயோபாயா கிராம பகுதியில் 18 மற்றும் 19 வயது கொண்ட இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகனங்களைத் திருடியுள்ளனர்.
 
இவர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள், மரத்தில் கட்டி வைத்துள்ளனர். மேலும், விஷ எறும்புகளை விட்டு கடிக்க வைத்துள்ளனர், தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த தண்டனையை அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
 
இதன்பின் வாலிபர்களின் உறவினர்கள் அவர்கள் செய்த தவறுக்காக பணத்தைக் கொடுத்த பின்னரே குற்றவாளிகளை கிராம மக்கள் விடுவித்துள்ளனர்.
 
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மருத்துவர்கள், வாலிபர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளார்கள் என்றும், அவர்களுள் ஒருவரின் சிறுநீரகம் செயலிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil