திபெத்திய கலாசாரத்தைப் பாதுகாக்கவே தன்னாட்சி தேவை - தலாய் லாமா
, திங்கள், 30 ஏப்ரல் 2012 (16:20 IST)
நாங்கள் சீனாவிடமிருது சுதந்திரத்தை கேட்கவில்லை என திபெத்திய தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். மேலும் திபெத்திய கலாசாரத்தைப் பாதுகாக்கவே தன்னாட்சியை கேட்கிறோம் என்றார்.இதுகுறித்து செய்தியாளர்கள் கூடத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும் அவர் கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் திபெத்தியர்களின் மனித உரிமைக்கும் சீன நாட்டுடன் வளர்ந்து வரும் வர்த்தக உறவுக்கும் இடையே ஒரு தெளிவான நிலையை கொண்டுள்ளதாக அவரை பாராட்டினார். கடந்த 2006ம் ஆண்டு திபெத்திய தலைவர் தலாய் லாமாவுக்கு கவுரவ கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டது.அப்போது அவர் கனடா நாட்டு பிரதமரை எனது பிரதமர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.