தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியினை காட்டாயப் பாடமாக்கும் இலங்கை அரசு
, வியாழன், 12 ஏப்ரல் 2012 (11:06 IST)
வட தமிழீழத்தில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மொழியினை காட்டாயப் பாடமாக்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசு மும்மொழி கொள்கைத் திட்டத்தின் வாயிலாக நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழர்களின் பகுதிகளில் புத்தர்சிலைகளை அமைத்து பௌத்தமயமாக்களை தீவீரப்படுத்தி வருகிறது. மேலும் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் ராணுவ முகாம்கள் அமைத்து ராணுவமயமாக்களையும் செய்து வருகிறது. தமிழர்களை அவர்களது நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ வைத்துள்ள சிங்கள அரசு, தற்போது தமிழ் மாணவர்களுக்கு சிங்களத்தை கற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி சிங்களமயமாக்களையும் விதைக்கத் துவங்கியுள்ளது.