Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சோமாலியாவை தாக்கிய புயலால் குறைந்தபட்சம் 100 பேர் பலி

சோமாலியாவை தாக்கிய புயலால் குறைந்தபட்சம் 100 பேர் பலி
, செவ்வாய், 12 நவம்பர் 2013 (12:57 IST)
சோமாலியாவை தாக்கிய கடும் புயலால் குறைந்தபட்சம் 100 பேர் பலியாகியிருக்க கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
FILE

சோமாலியாவின் புந்த் லேண்ட் பகுதியில் கரையை கடந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. சாலைகள், படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த பயங்கர புயலுக்கு குறைந்தபட்சம் 100 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் தெரிகிறது.

இந்த புயலால் பாதிக்கப்பட்ட ஹுசைன் அப்துல்லாஹி இதுகுறித்து தெரிவிக்கையில், 'இந்த புயலால் பலியான என் குடும்பத்தை சேர்ந்த 10 பேரை இதுவரை புதைத்துள்ளேன், நான் இதுவரை இத்தகைய கொடூர பாதிப்பை பார்த்ததில்லை. இந்த புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு, உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் மிக அதிகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil