Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன ஜனநாயக போராளிக்கான நோபல் பரிசை மனைவி பெறுகிறார்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2010 (13:17 IST)
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சீனாவின் ஜனநாயக போராளியும், அரசின் எதிர்ப்பாளருமான லியூ ஜியாபோ, தமது மனைவியை அப்பரிசை வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் சீர்திருத்தம், நாடாளுமன்ற சுதந்திரம், மத வழிபாட்டு சுதந்திரம் போன்றவற்றை வலியுறுத்தி சீனாவில் போராடி வரும் லியூ ஜியாபோ, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வழங்குவதாக நோபல் பரிசு கமிட்டி கடந்த வாரம் அறிவித்தது.

இந்நிலையில், தாம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தனது சார்பில் தமது மனைவியை அப்பரிசை வாங்குமாறு லியூ ஜியாபோ கேட்டுக்கொண்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. .

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments