சீனாவுடன் ஒரு வரம்புக்குட்பட்ட மோதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவுத் துறையின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர்,உளவுத் துறைக்கான அமெரிக்க செனட் தேர்வுக்குழு முன்னர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது அவர், சீனாவுடன் ஒரு வரையறையுடன் கூடிய மோதலுக்கு இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்தார்.
இந்திய-சீன எல்லையில் சீனாவின் மேலாதிக்கம் குறித்த இந்தியாவின் கவலை அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக இந்தியா தனது இராணுவ பலத்தை பலப்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.