Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் 107 செய்தி இணையதளங்கள் முடக்கம்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2013 (17:50 IST)
FILE
சீனாவில் செய்திகளை வெளியிடும் சுமார் 107 இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. முறையான உரிமம் பெறாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் சட்டவிரோதமாக செயல்படும் இணையதளங்களை முடக்கும் பணியும், இணையதங்களில் வெளியிடப்படும் செய்தியின் நம்பகத்தன்மையை அதிகாரிக்கும் நடவடிக்கையும் மே மாதம் 9 ஆம் தேதி துவங்கப்பட்டது.

இதற்கு புதிதாக தலைத்தூக்கிய நூற்றுக்கணக்கான இணையதளங்கள் தான் காரணம். இந்த இணையதளங்கள் போலியான செய்திகளை வெளியிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த நடவடிக்கையால் மக்கள் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்தை அரசு பறிக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நடவடிக்கையில் மக்களிடம் பிரபலமாக விளங்கிய ‘வாய்ஸ் ஆப் த பீப்பிள், டெமாக்ரடிக் லீகல் சூப்பர்விஷன் நெட், சைனீஸ் சிட்டிசன்ஸ் நியூஸ், ஜஸ்டிஸ் ஆன்லைன் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments