Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் வெடிபொருள் வாகனம் வெடித்து 7 பேர் பலி 200 பேர் காயம்

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2011 (19:28 IST)
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்சூ மாகாணத்தில் எரிவாயு நிலையம் அருகே வெடிபொருட்கள் நிரம்பிய இரண்டு வாகனங்கள் வெடித்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர். 200 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த 200 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை இந்திய நேரம் 9 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு சரக்கு லாரிகளில் 70 மெட்ரிக் டன்கள் வெடிபொருட்கள் இருந்தன. இது திடீரென வெடித்தது.

அருகிலிருந்த வீடுகளின் ஜன்னல்கள் சிதறின, அருகில் இருந்த கார்களும் கடும் சேதத்திற்குள்ளாகியது.

வெடிவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் இருந்த 5 மாடி கட்டிடம் கடும் சேதமடைந்துள்ளது.

இது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments