Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிகாகோவில் 7 பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

சிகாகோவில் 7 பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
சிகாகோ , புதன், 1 ஜூலை 2009 (09:27 IST)
சிகாகோவின் டிடோரிட் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 7 பள்ளி மாணவர்கள் மீது 2 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதொடர்பாக டிடோரிட் காவல்துறை பேச்சாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில் 14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மூன்று மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்.

டிடோரிட் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் இந்த மாணவர்கள், அந்நாட்டு நேரப்படி மதியம் 2.30 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil