Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் மறந்து தூங்கிய திருடன்

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் மறந்து தூங்கிய திருடன்
, வியாழன், 11 ஜூலை 2013 (14:47 IST)
FILE
அமெரிக்காவில் வீடு ஒன்றில் கொள்ளையிட சென்ற நபர் கொள்ளையடித்த பின் அதே வீட்டில் அயர்ந்து உறங்கி வசமாக சிக்கிச் கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

டொமினிக் பின்கார்ட் (21 வயது) என்ற மேற்படி நபரும் அவரது சகாவான ஜூலியன் எவன்ஜெலிஸ்ட்டும் வின்னர்ஸ் சேர்க்கினிலுள்ள வீடு ஒன்றில் அதிகாலை வேளையில் திருடுவதற்காக நுழைந்துள்ளனர்

அந்த வீட்டிலிருந்து நகைகளை திருடிய டொமினிக் பின்கார்ட் சற்று ஓய்வெடுப்பதற்காக நாற்காலியொன்றில் அமர்ந்துள்ளார்.

நாள் முழுவதும் கடுமையாக பணியாற்றியதால் களைப்படைந்திருந்த அவர் தன்னை மறந்து உறங்கிவிட்டார்.

அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியொன்றை களவாடிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஜூலியன் டொமினிக்கை எழுப்புவதற்கு மறந்து தொலைக்காட்சிப் பெட்டியுடன் அந்த வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டின் வரவேற்பறைக்குள் வந்த போது அங்கு அறிமுகமற்ற இளைஞன் ஒருவன் உறங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் டொமினிக்கை கைது செய்தார் அவர் வழங்கிய தகவல்களின் பிரகாரம் ஜூலியன் பின்னர் கைது செய்யப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil