காணாமல் போன விமானத்தின் பைலட் பெண்களை கேபினுக்குள் அழைத்த முறைகேடு!
, செவ்வாய், 11 மார்ச் 2014 (17:17 IST)
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 காணாமல் போய் 4வது நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காணாமல் போன மலேசிய விமானத்தின் சக பைலட் இதற்கு முன்பு ஓட்டும் அறைக்குள் இரு பெண் பயணிகளை அழைத்துச் சென்றதாகவும் விமனிகள் இருவருமே கேபினுக்குள் புகைப்பிடிப்பார்கள் என்றும் இது முறைகேடானது என்றும் திடுக்கிடும் தகவலை ஆஸ்ட்ரேலிய இணையதளம் வெளியிட்டுள்ளது.
தனது முந்தைய பயணத்தின் போது பைலட் கேபினுக்குள் மெல்பர்னைச் சேர்ந்த மிஸ்.ஜாண்டி ரூஸ், மற்றும் மிஸ் ஜான் மாரீ என்ற பயணிகளை அழைத்து புகேயிலிருந்து கோலாலம்பூர் வரை அவர்களை கேபினுள்ளேயே இருக்க அனுமதித்துள்ளாராம்.அந்த பைலட்டுடன் போட்டோக்களும் தாங்கள் எடுத்துக் கொண்டதாக அந்த இரு பயணிகளும் தற்போது கரன்ட் அஃபேர் என்ற ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமானிகள் இருவரும் இவர்கள் இருந்த நேரம் முழுதும் கேபினுள்ளேயே சிகரட் பிடித்தனர் என்றும் இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.