தனது முந்தைய பயணத்தின் போது பைலட் கேபினுக்குள் மெல்பர்னைச் சேர்ந்த மிஸ்.ஜாண்டி ரூஸ், மற்றும் மிஸ் ஜான் மாரீ என்ற பயணிகளை அழைத்து புகேயிலிருந்து கோலாலம்பூர் வரை அவர்களை கேபினுள்ளேயே இருக்க அனுமதித்துள்ளாராம்.
அந்த பைலட்டுடன் போட்டோக்களும் தாங்கள் எடுத்துக் கொண்டதாக அந்த இரு பயணிகளும் தற்போது கரன்ட் அஃபேர் என்ற ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமானிகள் இருவரும் இவர்கள் இருந்த நேரம் முழுதும் கேபினுள்ளேயே சிகரட் பிடித்தனர் என்றும் இது விதிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நேர்த்தில் இரு விமானிகளும் தங்கள் பக்கம் திரும்பி பேசிக்கொண்டே வந்தனர் என்று திடுக்கிடும் தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இவர்களது நண்பர்களையும் உள்ளே அழைத்து கைரேகை நிபுணர் போல் உங்கள் கை ஈரப்ப்சையுடம் இருக்கிறது நீங்கள் படைப்பாற்றல் மிக்கவர் என்று வேறு கூறினாராம் அந்த பலே பைலட்.