Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஸாப் ஒப்புதல் : பாக். ஏற்க மறுப்பு

கஸாப் ஒப்புதல் : பாக். ஏற்க மறுப்பு
இஸ்லாமாபாத் , செவ்வாய், 21 ஜூலை 2009 (20:15 IST)
கஸாப் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் கைதான ஒரே குற்றவாளியான அஜ்மல் கஸாப், தன் மீதான குற்றச் சாற்றுகளை ஒப்புக் கொண்டு, மும்பை நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி முக்தாரிடம் கேட்டபோது, அஜ்மல் கஸாப் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் "ஒரு பகுதி" மட்டுமே என்றும், இந்திய சிறை அதிகாரிகளின் பிடியில் இருக்கும் ஒருவர், நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் பதிலளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil