Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கராச்சியிலிருந்து தாவூத் தப்பி ஓட்டம்

Webdunia
வெள்ளி, 6 மே 2011 (19:34 IST)
இந்தியாவால் நீண்ட நாட்களாக தேடப்படும் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து சவூதி அரேபியாவுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை அமெரிக்க கமாடோ படையினர் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி கொன்றது அந்நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அத்துடன் இதேப்போன்ற தாக்குதலை நடத்தும் திறன் இந்திய இராணுவத்திற்கும் உண்டு என்று இராணுவ தளபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வைத்து தாவூத் இப்ராகிமை பாதுகாத்து வந்த ஐஎஸ்ஐ, பின்லேடன் கொல்லப்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரை கராச்சியிலிருந்து தப்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனையடுத்து தாவூத், தனது கூட்டாளி சோட்டா ஷகீலுடன் சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments