Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்தஹாரில் தற்கொலைத் தாக்குதல்: 8 பேர் பலி

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2009 (17:56 IST)
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள மாகாண உறுப்பினர்கள் அலுவலகத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், 2 பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து நடத்திய இத்தாக்குதலில் 7 காவலர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக கூறினார்.

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாக மேலும் 2 தற்கொலைப் படை பயங்கரவாதிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments