ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள மாகாண உறுப்பினர்கள் அலுவலகத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர், 2 பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து நடத்திய இத்தாக்குதலில் 7 காவலர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக கூறினார்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பாக மேலும் 2 தற்கொலைப் படை பயங்கரவாதிகளை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக இத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.