Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமன்: வெடி மருந்து ஆலை வெடித்து 78 பேர் பலி

Webdunia
திங்கள், 28 மார்ச் 2011 (19:37 IST)
ஏமனில் வெடிமருந்து ஆலை ஒன்று வெடித்து சிதறியதில் 78 பேர் பலியாகினர்.

ஏமனில் உள்ள ஏபியான் மாகாணத்தில் வெடி மருந்து ஆலை ஒன்று உள்ளது.

அருகில் உள்ள ஜார் நகரில் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்துவதற்காக, இந்த ஆலையில் வெடி மருந்து தயாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று இந்த ஆலைக்குள் அதிரடியாக புகுந்து, அதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு ஒன்று, தாங்கள் எடுத்துக் கொண்டது போக மீதமான வெடி மருந்தை அப்படியே விட்டு விட்டு சென்றுவிட்டது.

இதனைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் இன்று அதில் நுழைந்து, வெடிமருந்தை அள்ளிச் சென்றனர்.

இந்நிலையில் அந்த வெடிமருந்து ஆலையில் இன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் வசித்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments