Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்கலேட்டரில் தலைமுடி சிக்கி பெண் பரிதாப பலி

எஸ்கலேட்டரில் தலைமுடி சிக்கி பெண் பரிதாப பலி
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (17:52 IST)
கனடாவில் எஸ்கலேட்டரை உபயோகித்த பெண் ஒருவரின் ஆடை மற்றும் தலைமுடி மின் படிக்கட்டில் சிக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FILE

கனடாவின் மொன்ட்ரியல் மாகாணத்தில் இருக்கும் சுரங்கப்பாதை ஒன்றில் இயங்கும் எஸ்கலேட்டரில் 48 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.

காலை நேரம் என்பதால் கூட்ட நெரிசல் மிக்க இடத்தில் எதிர்பாராத விதமாக அவரது ஆடை மின் படிக்கட்டில் சிக்கியது, விபரீதத்தை உணர்ந்த அவர் உடனடியாக அதனை எடுக்க முயன்ற போது அருகிலிருந்தவர்களும் அவருக்கு உதவியுள்ளனர்.
webdunia
FILE

ஆனால், அப்போது அப்பெண்ணின் தலைமுடியும் மின்படிக்கட்டில் சிக்கியது. இதனால் அருகில் இருந்தவர்களால் அப்பெண்ணிற்கு உதவ இயலவில்லை. அவசர உதவிக்கு அழைப்பதற்குள் அப்பெண் மின்படிக்கட்டில் சிக்கி பரிதாபமாக பலியானார்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு படையினர் மற்றும் அவசர மருத்துவ குழுவினர் சென்ற போதும் எவ்வித பலனும் இல்லாமல் போனது.
webdunia
FILE

இதுகுறித்து போலீசார், எஸ்கலேட்டரில் இப்பெண்ணின் ஸ்கார்ப்பு (scarf) கீழே விழுந்தால் அதை எடுக்க முயற்சித்த பொழுது அவரின் தலைமுடி படியில் சிக்கிகொண்டது என்றும், சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil