Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைக்க மாத்திரை சாப்பிட்ட மாணவன் மரணம்

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2013 (12:14 IST)
FILE
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் உடல் எடையை குறைப்பதற்காக நச்சுதன்மை வாய்ந்த மாத்திரைகளை உட்கொண்டதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தில் படித்து வந்த இந்திய மாணவரான சர்மத் அல்லாதீன் (18), தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதில் ஆர்வம் உடையவர். இதனால் த‌ன் உடல் எடையை விரைவாக குறைப்பதற்காக டி.என்.பி என்ற நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள் அடங்கிய மருந்தை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கைக்கு பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்.

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஒரு செல்வந்தரின் மகனான அல்லாதீன் இத்தகைய நச்சுத்தன்மை வாய்ந்த மருந்துகளை பல நாட்களாக சாப்பிட்டு வந்ததாக அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் உணவுப் பாதுகாப்பு நிறுவனம், இந்த உடல் எடைக் குறைப்பு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments