Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌க் கா‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 51 பே‌ர் ப‌லி!

Webdunia
புதன், 18 ஜூன் 2008 (15:30 IST)
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நெரிசலான தெரு ஒன்றில் கார் குண்டு வெடித்தது. இதில் 51 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கார் குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தீயிற்கு பயந்து மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். சுமார் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 11-ஆம் தேதி ஷியா முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க, ஈராக் படையினருக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு இப்போது இந்த கார் குண்டு வெடித்துள்ளது.

மேற்கு பாக்தாத்தில் உள்ள சந்தை ஒன்றின் பேருந்து நிறுத்தம் அருகே இந்த கார் குண்டு வெடித்தது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி 68 உயிர்களை பலி வாங்கிய இரட்டைக் குண்டுவெடிப்பிற்கு இப்போது இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments