ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டின் கிர்குக் நகரில் நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 25 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கிர்குக் நகரில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில் நேற்று நிகழ்ந்த இத்தாக்குதலில் 12க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஈராக்கில் நேற்று இறையாண்மை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மேலும் அமெரிக்க படையினர் திரும்பிச் செல்வதால் நேற்று சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் ஈராக்கில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.