Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை வருகிறார் அப்துல் கலாம்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2011 (16:15 IST)
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக அந்நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

" நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும்" என்ற தலைப்பில் கொழும்பில் நடைபெற்று வரும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இத்தகவலை தெரிவித்தார்.

" இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்" என்று அவர் மேலும் கூறினார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments