Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய டாக்டர் மீது தாக்குதல் : ஆஸி. இளைஞர் மீது வழக்கு

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2009 (19:49 IST)
ஆஸ்ட்ரேலியாவில் இந்திய டாக்டர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் அந்நாட்டைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரேலியாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி டாக்டர் முகேஷ் ஹாய்க்கர்வால் என்பவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மெல்பர்னில் உள்ள பூங்கா ஒன்றின் அருகே வைத்து மர்மக் கும்பலால் தாக்கப்பட்டார்.

இதில் படுகாயமடைந்த அவர், கோமா நிலைக்கு சென்று மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஆல்ஃபர் அஷோபார்டி என்ற 20 வயது இளைஞர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ள நிலையில், இந்த வழக்கையும் சேர்த்து இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

இச்செய்தியை மெல்பர்னிலிருந்து வெளியாகும் ' தி ஏஜ் ' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments