Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வேலை அனுபவம் பெற இங்கிலாந்து மாணவர்கள் ஆர்வம்

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (15:45 IST)
இந்திய நிறுவனங்களில் வேலை அனுபவம் பெற இங்கிலாந்து மாணவர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளதாக பிரிட்டன் - இந்திய தொழிற் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கல்வி நிறுவனங்களில் பிஸ்னஸ் மற்றும் நிதி துறை படிப்புகளை படித்து முடிக்கும் மாணவர்கள், தங்களது படிப்புக்கான பணி அனுபவத்தையும், பயிற்சியையும் இந்திய நிறுவனங்கள் மூலமாக பெற விரும்புகின்றனர்.

இதனை உறுதிபடுத்தும்விதமாக பிரிட்டன் - இந்திய தொழில் கூட்டமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ், இங்கிலாந்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்ற 10 பிரிட்டிஷ் மாணவர்கள், பணி அனுபவம் பெறுவதற்காக இந்திய நிறுவனங்களில் வேலைக்காக சேர்ந்துள்ளனர்.

இது தவிர மேலும் பல பிரிட்டிஷ் மாணவர்களும் இந்திய நிறுவனங்களில் சேருவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பதாகவும், தங்களது படிப்புக்கேற்ற பணி அனுபவத்தை சோதித்து பார்ப்பதற்கான சூழல் இந்திய நிறுவனங்களில் அமையுமா என்பதை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் பிரிட்டன் - இந்திய தொழில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments