Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியர்களை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை : ஆஸி.பிரதமர் உறுதி

இந்தியர்களை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை : ஆஸி.பிரதமர் உறுதி
மெல்பர்ன் : இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சட்டப்படியான முழு நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ரட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்ட்ரேலிய நாடாளுமன்றத்தில் இன்று பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்தார்.

இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அறிவுகெட்டத்தனமானது என்று கடுமையாக கூறிய கெவின், ஆஸ்ட்ரேலியர்கள் அனைவரும் சார்பாக தாம் இதனைக் கூறுவதாகவும், இந்த தாக்குதல்கள் குறித்து ஆஸ்ட்ரேலியர்கள் அனைவரும் வருத்தமும், கண்டனமும் தெரிவிக்க வேண்டும் என்று ஆஸ்ட்ரேலியர்களை தாம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தம்மை தொடர்பு கொண்டு பேசிய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், " ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் 90,000 க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் எங்கள் நாட்டின் விருந்தினர்கள் " என்று தாம் கூறியதாக கெவின் மேலும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil