Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கார் விருது பெற்ற நடிகையின் தாய், சகோதரர் கொலை!

Webdunia
சனி, 25 அக்டோபர் 2008 (16:19 IST)
நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கார் விருது பெற்ற பிரபல நடிகையான ஜெனிபர் ஹட்சனின் தாய் மற்றும் சகோதரர் சுட்டுக் கொல்லப்படடனர்.

இந்தக் கொலைகள் தொடர்பாக 7 வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஜெனிபர் ஹட்சன். ஒரு தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான இவர், கடந்த ஆண்டு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஆஸ்கர் விருதனை வென்றார்.

சிக்காகோவிலுள்ள இவரது வீட்டில் வசித்து வந்த தாய் மற்றும் சகோதரர் நேற்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களது உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.

அவர்கள் வீட்டில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர். நடிகையின் தாய் மற்றும் சகோதரர் குடும்பத் தகராறு காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 7 வயது சிறுவனை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

இதனிடையே, படுகொலை பற்றி அறிந்ததும், நடிகை ஜெனிபர் ஹட்சன் தனது சொந்த ஊருக்கு விரைந்துள்ளார்..

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments