Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு 2பேர் பலி

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு 2பேர் பலி
, ஞாயிறு, 24 பிப்ரவரி 2013 (16:11 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரின் கிழக்கு பகுதியில் இன்று காலையில் 3 வெவ்வேறு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜலாலாபாத் நகரில் அமைந்த உளவு பிரிவு அலுவலகம் அருகே நுழைவு வாயிலை நோக்கி கார் ஒன்று வந்தது. இது தேசிய பாதுகாப்பு இயக்குனர் வந்து செல்லும் வழியாகும். அதன் மீது திடீரென நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பாதுகாவலர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், 3 பேர் காயமடைந்தனர். மேலும், இந்த தாக்குதலில் கட்டிடம் பலத்த சேதமடைந்தது என்று அரசு செய்தி தொடர்பாளர் அஹமது ஜியா அப்துல்ஜாய் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலீபான் அமைப்பை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக தகவல் கூறுகின்றது..

Share this Story:

Follow Webdunia tamil