Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா தான் உண்மையான போர்க்குற்றவாளி - ராஜபக்சே

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (16:01 IST)
அமெரிக்காவே உண்மையான போர்க்குற்றவாளி என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை கண்டியில் புவிநேரம் என்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே, புவி வெப்பமடையக் காரணமான நாடுகளே உண்மையான போர்க்குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டினார்.

மேலும், புவி வெப்படைதலால், அனைத்து தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்து போகக் கூடும்.

புவி வெப்பமடையக் காரணமான நாடுகள் தான் உண்மையான போர்க்குற்றவாளிகள், மனித உரிமைகளை மீறியவர்கள். இந்த விதிகளை மீறுகின்ற வகையில் மேற்குலக நாடுகளே உள்ளன.

புள்ளிவிபரங்களின்படி, புவி வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில், முதலாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. புவி வெப்பமடைதலுக்கு அதன் பங்களிப்பு 25 விழுக்காடு என்று ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments